அறத்துப்பால் · இல்லறவியல்
11. செய்ந்நன்றியறிதல்
குறள் 101–110
- குறள் 101செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது.
- குறள் 102காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது.
- குறள் 103பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்நன்மை கடலின் பெரிது.
- குறள் 104தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார்.
- குறள் 105உதவி வரைத்தன் றுதவி உதவிசெய்யப்பட்டார் சால்பின் வரைத்து.
- குறள் 106மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்பாயார் நட்பு.
- குறள் 107எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு.
- குறள் 108நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று.
- குறள் 109கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்தஒன்றுநன் றுள்ளக் கெடும்.
- குறள் 110எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு.