அறத்துப்பால் · இல்லறவியல் · செய்ந்நன்றியறிதல்

குறள் 102செய்ந்நன்றியறிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.

மூலம் · அச்சுப் பக்கம் 21 · ஸ்கேன் 54 · மூலமும் சான்றும்