அறத்துப்பால் · இல்லறவியல் · செய்ந்நன்றியறிதல்

குறள் 104செய்ந்நன்றியறிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்.

மூலம் · அச்சுப் பக்கம் 21 · ஸ்கேன் 54 · மூலமும் சான்றும்