குறள் 108 — செய்ந்நன்றியறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவர் தமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல. அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.
மூலம் · அச்சுப் பக்கம் 22 · ஸ்கேன் 55 · மூலமும் சான்றும்