அறத்துப்பால் · இல்லறவியல்
10. இனியவை கூறல்
குறள் 91–100
- குறள் 91இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
- குறள் 92அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்துஇன்சொலன் ஆகப் பெறின்.
- குறள் 93முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்இன்சொ லினதே அறம்.
- குறள் 94துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
- குறள் 95பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்குஅணியல்ல மற்றுப் பிற.
- குறள் 96அல்லவை தேய அறம்பெருகும் நல்லவைநாடி இனிய சொலின்.
- குறள் 97நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல்.
- குறள் 98சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்இம்மையும் இன்பம் தரும்.
- குறள் 99இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோவன்சொல் வழங்கு வது.
- குறள் 100இனிய உளவாக இன்னாத கூறல்கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.