இன்பத்துப்பால் · கற்பியல்
133. ஊடலுவகை
குறள் 1321–1330
- குறள் 1321இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்வல்ல தவரளிக்கும் ஆறு.
- குறள் 1322ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளிவாடினும் பாடு பெறும்.
- குறள் 1323புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடுநீரியைந் தன்னார் அகத்து.
- குறள் 1324புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்உள்ளம் உடைக்கும் படை.
- குறள் 1325தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்அகறலின் ஆங்கொன் றுடைத்து.
- குறள் 1326உணலினும் உண்ட தறலினிது காமம்புணர்தலின் ஊடல் இனிது.
- குறள் 1327ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்கூடலிற் காணப் படும்.
- குறள் 1328ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்கூடலில் தோன்றிய உப்பு.
- குறள் 1329ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்பநீடுக மன்னோ இரா.
- குறள் 1330ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்கூடி முயங்கப் பெறின்.