இன்பத்துப்பால் · கற்பியல் · ஊடலுவகை

குறள் 1326ஊடலுவகை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உணலினும் உண்ட தறலினிது காமம்புணர்தலின் ஊடல் இனிது.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம். அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம்.

மூலம் · அச்சுப் பக்கம் 270 · ஸ்கேன் 303 · மூலமும் சான்றும்