குறள் 1326 — ஊடலுவகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உணலினும் உண்ட தறலினிது காமம்புணர்தலின் ஊடல் இனிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம். அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம்.
மூலம் · அச்சுப் பக்கம் 270 · ஸ்கேன் 303 · மூலமும் சான்றும்