குறள் 1325 — ஊடலுவகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்அகறலின் ஆங்கொன் றுடைத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தவறே செய்யாத நிலையிலும்கூட தன்னுள்ளம் கொள்ளை கொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய தோள்களைப் பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது.
மூலம் · அச்சுப் பக்கம் 269 · ஸ்கேன் 302 · மூலமும் சான்றும்