இன்பத்துப்பால் · கற்பியல் · ஊடலுவகை

குறள் 1324ஊடலுவகை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்உள்ளம் உடைக்கும் படை.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

இறுகத் தழுவி இணை பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல் அமைகிறது. அந்த ஊடலில்தான் என் உள்ளத்து உறுதியைக் குலைக்கும் படைக்கலனும் இருக்கிறது.

மூலம் · அச்சுப் பக்கம் 269 · ஸ்கேன் 302 · மூலமும் சான்றும்