இன்பத்துப்பால் · கற்பியல் · ஊடலுவகை

குறள் 1322ஊடலுவகை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளிவாடினும் பாடு பெறும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

காதலரிடையே மலர்ந்துள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம் பெருமையுடையதேயாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 269 · ஸ்கேன் 302 · மூலமும் சான்றும்