குறள் 987 — சான்றாண்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்என்ன பயத்ததோ சால்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தமக்குத் தீமை செய்தவர்க்கும் திரும்ப நன்மை செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்?
மூலம் · அச்சுப் பக்கம் 200 · ஸ்கேன் 233 · மூலமும் சான்றும்