பொருட்பால் · நட்பியல் · உட்பகை

குறள் 884உட்பகை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணாஏதம் பலவும் தரும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 179 · ஸ்கேன் 212 · மூலமும் சான்றும்