குறள் 865 — பகைமாட்சி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்பண்பிலன் பற்றார்க் கினிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.
மூலம் · அச்சுப் பக்கம் 175 · ஸ்கேன் 208 · மூலமும் சான்றும்