பொருட்பால் · நட்பியல் · கூடா நட்பு

குறள் 830கூடா நட்பு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்டகநட் பொரீஇ விடல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் அந்த நட்பையும் விட்டு விட வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 168 · ஸ்கேன் 201 · மூலமும் சான்றும்