பொருட்பால் · நட்பியல் · கூடா நட்பு

குறள் 827கூடா நட்பு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்தீங்கு குறித்தமை யான்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பகைவரிடம் காணப்படும் சொல்வணக்கம் என்பது வில்லின் வணக்கத்தைப் போல் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாது.

மூலம் · அச்சுப் பக்கம் 168 · ஸ்கேன் 201 · மூலமும் சான்றும்