பொருட்பால் · நட்பியல் · நட்பாராய்தல்

குறள் 794நட்பாராய்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக் குரியதாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 161 · ஸ்கேன் 194 · மூலமும் சான்றும்