குறள் 742 — அரண்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும் உடைய தரண்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 151 · ஸ்கேன் 184 · மூலமும் சான்றும்