அறத்துப்பால் · இல்லறவியல் · அன்புடைமை

குறள் 72அன்புடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.

மூலம் · அச்சுப் பக்கம் 15 · ஸ்கேன் 48 · மூலமும் சான்றும்