பொருட்பால் · அமைச்சியல் · தூது

குறள் 686தூது

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்தக்க தறிவதாந் தூது.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

கற்றறிவாளனாகவும், பகைவரின் கனலுக்கும் பார்வைக்கு அஞ்சாதவனாகவும், உள்ளத்தில் பதியுமாறு உரைப்பவனாகவும், உரிய நேரத்தில் உணரவேண்டியதை உணர்ந்து கொள்பவனாகவும் இருப்பவனே சிறந்த தூதனாவான்.

மூலம் · அச்சுப் பக்கம் 140 · ஸ்கேன் 173 · மூலமும் சான்றும்