பொருட்பால் · அமைச்சியல் · தூது

குறள் 683தூது

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்வென்றி வினையுரைப்பான் பண்பு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 139 · ஸ்கேன் 172 · மூலமும் சான்றும்