குறள் 571 — கண்ணோட்டம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகைஉண்மையான் உண்டிவ் வுலகு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது.
மூலம் · அச்சுப் பக்கம் 117 · ஸ்கேன் 150 · மூலமும் சான்றும்