குறள் 138 — ஒழுக்கம் உடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்என்றும் இடும்பை தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும். தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.
மூலம் · அச்சுப் பக்கம் 28 · ஸ்கேன் 61 · மூலமும் சான்றும்