இன்பத்துப்பால் · கற்பியல் · புலவி நுணுக்கம்

குறள் 1317புலவி நுணுக்கம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்யாருள்ளித் தும்மினீர் என்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தும்மினேன்; வழக்கப்படி அவள் என்னை வாழ்த்தினாள். உடனே என்ன சந்தேகமோ “யார் உம்மை நினைத்ததால் தும்மினீர்” என்று கேட்டு, முதலில் அளித்த வாழ்த்துக்கு மாறாக அழத் தொடங்கிவிட்டாள்.

மூலம் · அச்சுப் பக்கம் 268 · ஸ்கேன் 301 · மூலமும் சான்றும்