இன்பத்துப்பால் · கற்பியல் · புலவி நுணுக்கம்

குறள் 1312புலவி நுணுக்கம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மைநீடுவாழ்க என்பாக் கறிந்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை “நீடுவாழ்க” என வாழ்த்துவேன் என்று நினைத்து.

மூலம் · அச்சுப் பக்கம் 267 · ஸ்கேன் 300 · மூலமும் சான்றும்