இன்பத்துப்பால் · கற்பியல் · புணர்ச்சி விதும்பல்

குறள் 1284புணர்ச்சி விதும்பல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்துகூடற்கண் சென்றதென் நெஞ்சு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கிவிடுவதே காதலின் சிறப்பு.

மூலம் · அச்சுப் பக்கம் 261 · ஸ்கேன் 294 · மூலமும் சான்றும்