இன்பத்துப்பால் · கற்பியல் · நெஞ்சொடு கிளத்தல்

குறள் 1247நெஞ்சொடு கிளத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சேயானோ பொறேனிவ் விரண்டு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டுவிடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் நாணத்தையாவது விட்டு விடு. இந்த இரண்டு செயல்களையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது.

மூலம் · அச்சுப் பக்கம் 254 · ஸ்கேன் 287 · மூலமும் சான்றும்