குறள் 1179 — கண் விதுப்பழிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடைஆரஞர் உற்றன கண்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்து விட்டாலும் பிறகு தூங்குவதில்லை. இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்களாகத்தானே இருக்க முடியும்.
மூலம் · அச்சுப் பக்கம் 240 · ஸ்கேன் 273 · மூலமும் சான்றும்