இன்பத்துப்பால் · களவியல் · குறிப்பறிதல்

குறள் 1096குறிப்பறிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்ஒல்லை உணரப் படும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார்போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 224 · ஸ்கேன் 257 · மூலமும் சான்றும்