பொருட்பால் · குடியியல் · நல்குரவு

குறள் 1047நல்குரவு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்பிறன்போல நோக்கப் படும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போலத்தான் கருதுவாள்.

மூலம் · அச்சுப் பக்கம் 212 · ஸ்கேன் 245 · மூலமும் சான்றும்