பொருட்பால் · குடியியல் · நல்குரவு

குறள் 1044நல்குரவு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்தசொற்பிறக்கும் சோர்வு தரும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கிவிடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 211 · ஸ்கேன் 244 · மூலமும் சான்றும்