பொருட்பால் · குடியியல் · நல்குரவு

குறள் 1041நல்குரவு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்இன்மையே இன்னா தது.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.

மூலம் · அச்சுப் பக்கம் 211 · ஸ்கேன் 244 · மூலமும் சான்றும்