கவிதை 24 / 77
தமிழ் வளர வழிநடைப் பயணம்
A Walking Journey for Tamil to Flourish
தமிழ் வளரவழிநடைப் பயணம்
12.4.73 அன்று பறம்புமலையில் நடைபெற்ற பாரிவிழாவில் “தமிழ் வளர வழிநடைப் பயணம்” என்றதலைப்பில் நடைபெற்ற கவியரங்கில்கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்தலைமைக் கவிதையுரை.
மலையெலாம் வளத்தைப் பாடும்! தமிழர்கலையெலாம் பண்பைப் பாடும்! கடல்அலையெலாம் நடமே ஆடும்! பகைமைக்குலையெலாம் நடுங்கி ஓடும்!கோடுவளர்காடுதனில்ஓடிவிளைஆடுகின்றபீடுமிகு மானினமும்பாடும் இசைஜோடிக்குயில்தாளமொடுபாவமிடு
கானமயில்புள் இனமும்பட்டுக்கொடிகொற்றக்குடைசுற்றிச்சுழல்வெற்றித்திருமுத்துத்தமிழ்சுற்றுச்சுடர்பெற்றுக்குலகொடைபாரிப்புகழ்வாரித் தொழுதிடுவோம்.வழிநடைப் பயணமென வாகான தலைப்பீந்துவிழியொத்த தமிழினம்தான் வளர்வதற்குவகைசெய்தீர்! வாழ்க! வாழ்க!இனம் வாழத் தினம் அயராப் பணிபுரிவோம்சினம் கொள்ளல் தீதன்று தமிழர்க்குக் கேடு வந்தால்!சிங்கத்தின் கூட்டமன்றோ: சிறுநரிகள்ஊளைக்கா தலைவணக்கம்?பொங்குற்ற புலிகள் முன்னே புல்லியர்க்கா ஆர்ப்பாட்டம்?எங்குற்றான் என் தமிழன்?இங்குள்ள இழிவுகளை எதிர்ப்பதற்குத் துணிவின்றிச்செங்குத்துத் தூணைப்போல் நிற்கின்றானா?அங்கத்தில் துடிப்பின்றிக் கிடக்கின்றானா?அய்யோ பாவம் அவனுக்குச்சங்கத்தில் பாட்டெழுதி அரங்கேற்றுங்கள்!தங்கத்தில் சிலையொன்று அமைத்திடுங்கள்!உளி இரண்டை உதட்டின் மேல் வைத்தாற்போல்ஒளிமிகுந்த பாண்டியர்க்கு மீசையுண்டுஇளி வந்ததில்லை என்று இனமுழக்கம் செய்வதுபோல்காதின்
வெளிவரையில் படர்ந்திருக்கும் சோழன் மீசைகளிறாட்டுந் துதிக்கை போன்றுகண் நோக்கி வளர்ந்திருக்கும் - சற்றுநெளிகாட்டும் நீளமீசை சேரன் மீசை!அன்றந்த மீசையெலாம் துடித்ததனால் - பகைக்குன்றங்கள் பொடியான கதைகள் உண்டுஇன்றந்த வீரம் வேண்டும் - மிகவும் வேண்டும்இன்செயலில் வீரம் தேக்கிவன்செயல்கள் அறவே போக்கிமுன்பிருந்த தமிழர்களின் உணர்வைப் பெறுக...மான உணர்வைப் பெறுக...தன்மான உணர்வைப் பெறுக...இங்கு புலவீர்எட்டுவழி குறிப்பிட்டுப் பாடுகின்றீர் - தமிழர்க்குமுட்டுவழி காட்டியவர் யார் என்பீர்?குட்டுவழிப் பேர்வழிகள், நாம் குனியும் வரைதட்டுவழி இல்லாமல் தர்பார்தான் நடத்திடுவர்அதனாலே...எட்டும் வழி சிலவற்றை இங்குநாம் கண்டிடுவோம்!கபிலர்வழி கவிஞர்வழி மட்டுமல்லகண்போன்ற நட்புக்குச் சிறந்தவழிகருணைவழிசிவிகையொடு செங்கோலும் தேரும் படையுமேசெருக்களத்தில் தோற்ற பாரி செத்து வீழசெம்மாங்கனியிரண்டாம் அவன் மகளிர் மணமுடிக்கஅம்மா (க்) கவி கபிலன் பட்டபாடு...இறுதியிலே,காரிமன்னன் செல்வர்க்குப்பாரிமகளிர் துணையேயானார்கபிலரது முயற்சியினால்!
நாடாண்ட தன் தோழன் - தமிழ்நாயகனாம் பாரிக்குத்தான் செய்யும்தனிக்கடமை முற்றிற்றென்றுஏடாண்ட பெருங்கவிஞன் கபில மேலோன்“என்றன் பாரியுடன் இனிச் சேரத் தடையில்லை”எனக்கருதி வடக்கிருந்து உயிர் நீத்தான்!சாகின்றான் நண்பன் எனில் அவன் தலையில்அவசரமாய்க் கல் ஒன்றைப் போடுகின்றஆருயிர்த் தோழருண்டு இந்நாளில்அவரெல்லாம் வழிமாற்றி நடப்பதற்குக்கபிலர்வழி... கற்கின்ற வழியன்றோ!ஒளவை வழி-கோல்ஊன்றி நடக்கின்ற ஒளவைப்பாட்டி - செங்கோல்முறை சாயாமல் இருப்பதற்கு வழிகள் சொன்னாள்இளம்பெருவழுதி வழி - தமிழ்இனம்பெறு நல்வழியாம்வள்ளுவர் வழி நடந்தால் - நெஞ்சில்உள்ளுவரோ பகைவர் நெருங்க!இல்லறத்தைத் துறந்தவழி இளங்கோ வழிதமிழர்க்குநல்லறத்தைத் தந்தவழி அவர்தந்த சிலம்புவழி!அப்பரது வாழ்க்கைவழி அன்புவழி...!அதுபோன்றதே அடிகள் வள்ளலார்வழிமுத்தனைய கொள்கைகளை வகுத்தவழிஅறிஞர் அண்ணாவழி!... அருமை அண்ணாவழி!இவ்வழிகள் பற்றிப்பாட வருகின்றார்புலவரெல்லாம்...வழிவிடுவோம் - சுவைமொழிபெறுவோம்:
(கவிஞர் சுப்பிரமணியம் ‘கபிலர்வழி’என்ற தலைப்பில் பாடி முடிக்கிறார்.)
அடுத்து,
அறம் செய விரும்புகின்றார்அடிகளார் எனக் கேள்வியுற்றுஏற்பது இகழ்ச்சியெனும் பழமொழிமறந்துவிட்டு-அப்துர் ரகுமான்(ஒளவை) வழிகாண வந்துள்ளார்ஆத்திச்சூடிதான் நான் சொன்னேன்!அன்பு ரகுமானே!ஆறுவது சினம்!ஊக்கமது கைவிடாமல்உரைத்திடுக உமதுபாடல்:
(கவிஞர் அப்துர் ரகுமான் ‘ஒளவை வழி’என்ற தலைப்பில் பாடி முடிக்கிறார்.)
அடுத்து,இளஞ்சேரன் என்பார்என்போலத் தலை வழுக்கை...இருக்கட்டுமே!இளநீரும் வழுக்கை தானே! என்இனஞ்சேரும் இளஞ்சேரஇனிய வழி கண்டிடுக:
(கவிஞர் கோவை இளஞ்சேரன் ‘வழுதி வழி’என்ற தலைப்பில் பாடி முடிக்கிறார்.)
அடுத்து,சத்து மிகு தமிழ் எடுத்து - பழக்கொத்து நிகர் கவி புனையும்முத்து சம்பந்தம்
அடுத்து.முழக்குகின்றார்-அவர் பாட்டைவள்ளுவர் பாட்டை:
(கவிஞர் முத்துசம்பந்தம் ‘வள்ளுவர் வழி’என்ற தலைப்பில் பாடி முடிக்கிறார்.)
அடுத்து,சிலம்பு விற்க வருகின்றார்பாண்டியன்இஃதென்னசிலப்பதிகாரத்தை மாற்றுகின்றாய்என்கின்றீரா?இல்லை, இல்லை!சண்முக பாண்டியனார்இளங்கோ வழி காட்டுகின்றார்.இதைத்தான் சொன்னேன்.
(கவிஞர் சண்முகபாண்டியன் ‘இளங்கோ வழி’என்ற தலைப்பில் பாடி முடிக்கிறார்.)
அடுத்து,அடி வேண்டும் வழி நடக்கஅப்பரடி வேண்டும் வழி நடக்க என்றுவடிவேலன் சிங்காரமாய் வருகின்றார்-சிங்கார வடிவேலன் வருகின்றார்.
(கவிஞர் சிங்காரவடிவேலன் ‘அப்பர் வழி’என்ற தலைப்பில் பாடி முடிக்கிறார்.)
அடுத்து,மரியதாசுஉரியதாம் மனிதர்க்கு வள்ளலார் வழியெனவேமரியதாசர் உரைப்பதும் சரிதானே!
(கவிஞர் மரியதாசு ‘வள்ளலார் வழி’என்ற தலைப்பில் பாடி முடிக்கிறார்.)
அடுத்து,பண்ணாய்ந்து பாடுகின்ற முடியரசுஅண்ணாவின் வழி ஆய்ந்து பாடுகின்றார்!கண்ணான கவியரசுஎந்நாளும் நம் அரசு
(கவியரசு முடியரசன் ‘அண்ணா வழி’என்ற தலைப்பில் பாடி முடிக்கிறார்)
எட்டுவழி கூறிவிட்டார்-கேட்டிருந்தோம்!இப்போதுஎங்கள் வழி எந்த வழி?சிங்கம்புணரி வழி - திருச்சி வழி-தஞ்சை வழி-அண்ணன் எமக்கு வகுத்த வழிஇவ்வழிதான்!வருகின்றோம் -
வணக்கம்.
❀