காட்சி 87] [பூமாலை வீடு - காலை

காட்சி 87·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

[பூமாலை காப்பி சாப்பிட்டு முடிகிறது.குண்டுமணி பேப்பருடன் ஓடிவந்து]

குண்டுமணி : அம்மா அம்மா பாத்திங்களா ! குமுதா அம்மா விலாசத்தைக் கேட்டு உங்க தம்பி விளம்பரம் பண்ணியிருக்காரு

பூமாலை: ஆ! (பத்திரிகையைப் பார்த்தல்) குமுதாவைத் தேடுகிறான் பரந்தாமன் - பாவி ! அவளுக்கும் ஏதோ ஆபத்து வரப்போகிறது ! குண்டுமணி நான் உடனே மதறாஸ் புறப்பட வேண்டும்.

குண்டுமணி : ...

பூமாலை : நான் போனால்தான் அந்த நாசகாரனிடமிருந்து குமுதாவைக் காப்பாற்ற முடியும்!