காட்சி 65]

காட்சி 65·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

[மில் முதலாளி ரூம்

முதலாளி : (பரந்தாமனிடம்) உஷாவின் இஷ்டத்துக்கு விரோதமா திருமணம் செய்ய மாட்டேன்.

பரந்தாமன் : பெண்புத்தி பின்புத்தி என்பார்கள். இந்த ஒரு விஷயத்தில் பெற்றோர்கள் அபிப்ராயத்திற்குத்தான் பெண்கள் நடக்க வேண்டும்.

முதலாளி : பெற்றோர்கள் இஷ்டமே வேறு மாப்பிள்ளைக்கு அவளைக் கொடுக்க வேண்டும் என்று தானே.....

பரந்தாமன் : அப்படியானால் முடியாது. இல்லையா? உம்.

முதலாளி: இது என்னய்யா கேள்வி! நல்லாயிருக்கு .....

பரந்தாமன் : கடைசியாகச் சொல்கிறேன், உஷாவை எனக்குக் கொடுத்தால் சரி ; இல்லாவிட்டால் பெரியதொரு புரட்சியை சமாளிக்க நேரிடும்.

முதலாளி: என்னய்யா பூச்சி காட்ற...

பரந்தாமன் : இந்தத் தடவை பணத்தைக் கொடுத்து ஏமாற்ற முடியாது பரந்தாமனை !

முதலாளி: பெண்ணைக் கொடுத்து ஏமாறச் சொல்றியா? முடியாது ! எது வேண்டுமானால் செய்துக்கொள் போ !

(பரந்தாமன் கோபமாக வெளியேறுகிறான்)