காட்சி 34]
காட்சி 34·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
(கரகோஷம். புண்யகோடிக்கு ஒரே பூரிப்பு)
[பூமாலை பிள்ளைகளுடன்!]
பூமாலை: ஜீவஹிம்சை கூடாதென்றவர்கள் இருவரைச் சொல்லு.
பையன் : புத்தர், காந்தி
பூமாலை: முகுந்தா! மூவேந்தர் யார்?
பையன் : சேரன், சோழன்.... (திணறுவது)
பூமாலை : உம். சொல்லு
பாண்டியன்
(பாண்டியன் என்றதும் அவள் முகம் மாறுகிறது- உதடுகள் முணுமுணுக்கின்றன. பிறகு மாணவ - மாணவிகளிடம்)
பூமாலை: சரி வீட்டுக்கு போய்ட்டு நாளைக்கு வாங்க
(எல்லோரையும் அனுப்புகிறாள். அவர்கள் போனதும், தோட்டத்துப் பக்கம் போகிறாள்)