காட்சி 28] [குமுதா வீடு—சென்னை
காட்சி 28·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[பாண்டியனை நிற்கவைத்து குமுதா போட்டோ எடுக்கிறாள்]
குமுதா: நில்லுங்க சரியா—ஆங்—கொஞ்சம் சிரிங்க... கொஞ்சம் கொஞ்சம்... ஸ்டடி பிளீஸ், ரைட்... தேங்க்ஸ்...
(போட்டோ எடுத்துவிடுகிறாள்)
பாண்டியன்: இங்கே கொடு. நான் உன்னைப் பிடிக்கிறேன்.
குமுதா: என்னாது ..
பாண்டியன் : படம் பிடிக்கிறேங்கிறேன்.
குமுதா: அதானே! (வெட்கமுடன்)
பாண்டியன் : (கேமராவை வாங்கி) ம்... ஸ்டடி பிளீஸ்....
(குமுதா நடராஜர் போல அபிநயம் பிடித்து நிற்கிறாள்)
பாண்டியன் : இது என்னா இது !
குமுதா: சின்னம்மா!
பூமாலை : ஏங்கண்ணு!
(அப்போது பூமாலை வருகிறாள்)
குமுதா: நாங்க தனித்தனியா போட்டோ எடுத்துட்டோம். ரெண்டுபேரும் நிக்கிறோம் நீ எடு!
பூமாலை : ஊஹும் குமுதா! எனக்கு எடுக்கத் தெரியிலே நீயே எடு!
குமுதா: போ சின்னம்மா! (சிணுங்கியபடி கேமராவை வாங்கிக்கொண்டு) சரி சின்னம்மா ! நீங்க ரெண்டுபேரும் நில்லுங்க நான் எடுக்கிறேன். (களங்கமில்லாமல்)
பூமாலை : நானா.
குமுதா : போய் நில்லு சின்னம்மா!
(பூமாலை பாண்டியன் அருகே போய் நிற்கிறாள். குமுதா போட்டோ எடுக்கப் போகிறாள்)
குமுதா: ஸ்டடி பிளீஸ்...
(குண்டுமணியின் சந்தோஷ கூச்சல்—குமுதா நடுங்கியபடி கேமராவைக் கீழே போட்டுவிடுகிறாள்)
பூமாலை : ஏ...என்ன... என்ன?
குண்டுமணி : (பேப்பரைக் காட்டி) குமுதாம்மா பாஸ் ! பாஸ் ! பாஸ்!
குமுதா: பாஸா!
பூமாலை : பாஸ் ! குமுதா நீ கெட்டிக்காரி!
(தழுவிக்கொள்ளுதல்)
பாண்டியன் : குமுதா கங்ராஜுலேஷன்ஸ்...
(இருவரும் கை கொடுக்க முயலல்)
குண்டுமணி : (பத்திரிகையைக் காட்டி) இந்த பாருங்க நம்பரு. பதினாறு இருபத்தினாலு..
பாண்டியன்: இருபத்தினாலு... அட என் வயசுகூட இருபத்தினாலுதான்.
குமுதா: என் வயசு பதினாறுதான்.
குண்டுமணி : பொருத்தமான நம்பருதான்.
பூமாலை : (அதட்டல்) ஏய்....சும்மா இரு ...
குண்டுமணி : இல்லிங்க. குமுதாம்மா எண்ணும் பதினாறு வயசா மார்க்கண்டி மாதிரி இருக்கணுங்கிறேன்.
(எல்லோரும் சிரிப்பு)
பூமாலை : அப்ப ஊருக்குப் புறப்படலாமா!
குமுதா : அவர்...
குண்டுமணி : அவரைப்பத்தி நீங்க கவலைப்படவேண்டீதில்லைம்மா. இனிமே நம்ப விரட்டினாகூட அவர் நம்பளைவிட்டுப் போமாட்டாரு !