களஞ்சியப் பகுதி 2
58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
* * * * ஞானக்கண்: ராணி...ராணி!... ராணி: 'இதோ வந்துட்டேனப்பா, ஞான: என்னம்மா செஞ்சிக்கிட்டு இருந்தே? ராணி: உங்களுக்கு 'ஹார்லிக்ஸ்' போட்டேனப்பா... இந்தாங்க, சாப்பிடுங்க... இருங்கப்பா. நானே தர்ரேன். ஞான: [குடித்துவிட்டு] அப்பாடா! ராணி...அம்மா ராணி!... ராணி: அப்பா!...அப்பா!... ஞான: உம்... அப்பாவுக்கு அன்புப் பணி செய்வதையே கடமையாகக் கொண்டகை... இனிமேல் என்னால் பார்க்க முடியாதே அம்மா! கள்ளமில்லாத உன் புன்னகையை என்னாலே காணமுடியாதே அம்மா! ராணி: அப்பா! ஞான: [அவளது கையைத் தடவியபடியே] எங்கே அம்மா மோதிரம்? ராணி: அதை விற்றுத்தானம்பா ஆஸ்பத்திரி செலவு செய்தேன்... விலையுயர்ந்த மருந்துகளுக்குந் கூட உங்கள் விழிகளுக்கு ஒளியேற்றும் வலிமையில்லை அப்பா... ஞான: அழாதே அம்மா! எனக்குக் கண்போனால் என்ன? இனி நீ தான் என் கண்கள்—உன் நல்ல பண்பும் நல்ல நடத்தையும்தான் என் கண்ணின் மணிகள்! பிறகு நான் எதுக்கம்மா கவலைப்படனும்? ஆனால் இந்தக் குருடனை கட்டிக்காக்கும் குடும்ப பாரம் உன் தலையிலே விழுந்ததேன்னு நினைக்கும் போது தான்... ராணி: என்னப்பா அப்படிச் சொல்றீங்க! படிப்பும் மூளையும் இருக்கும்போது பிழைப்பைப்பற்றி என்னப்பா கவலை? இன்னைக்கே ஆரம்பிக்கிறேன், ஒரு நல்ல வேலை தேடுறதுக்கு... ஞான: உம்... வேலை பார்ப்பது! சின்னஞ் சிறுசை வெளியே அனுப்பிவிட்டு என்னாலே எப்படியம்மா வீட்டிலே இருக்க முடியும்? மெல்லாமெ விழுங்குகிற மலைப்பாம்புகளும், மனச்சாந்தியோட இருக்கிறவங்களைப் பார்த்துப் பழிக்கும் மந்திகளும் இருக்கிற உலகமம்மா இது! ராணி: உங்கள் மகளுக்கு தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் மனவலிமை நிறைய இருக்கிறதப்பா... ஞான: உண்மைதான் அம்மா! மனவலிமை என்பது உள் அழகு ஆனால் வெளி அழகு சில நேரங்களில் வேதனைக்குப் பாக்கு வைத்துவிடும்... ராணி: என்னப்பா சொல்றீங்க? ஞான: நான் அடிக்கடி சொல்வேனே, கூந்தலுக்குப் பூவும், நெற்றிக்குப் பொட்டுங்கூட வைக்கக் கூடாதுன்னு, அதைத்தானம்மா ஞாபகப்படுத்துகிறேன்....... அந்த ஆபத்து நிறைந்த அழகையெல்லாம் அந்தஸ்து உள்ளவர்களுக்கே விட்டு விடுவோம்... என்னம்மா பேசாமல் இருக்கிறாய்? உம்.. அழகுக்கு அழகு செய்துகொள் என்று சொல்ல வேண்டிய அப்பா ஆமைபோல் முடங்கச் சொல்கிறானே என்று வருத்தப்படுகிறாயா? ராணி: இல்லேப்பா... நீங்க பாத்து ஆனந்தப்படமுடியாத அழகையெல்லாம் நான் ஏனப்பா செஞ்சுக்கப்போறேன்... ஞான: ஆமாம்மா! அதுதான் புத்திசாலிப் பெண்ணுக்கு அழகு! ராணி: சரிப்பா! ஒரு கம்பெனியிலே வேலையிருக்குன்னு கேள்விப்பட்டேன். இப்பவே போனா கொஞ்சம் அனுகூலமாயிருக்கும். நான் பேய் பார்த்துட்டு வரட்டுமாப்பா? ஞான: சரியம்மா! நான் வேற வழி என்ன சொல்லப் போறேன்—ஜாக்கிரதையாப் போயிட்டு வாம்மா...