காட்சி—35
காட்சி 35·46 காட்சிகளில்
(இடம் அகதி முகாம்)
கல் : அண்ணு இரங்கூனிலிருந்து அகதிகள் எல்லாம் வந்திருக்காங்களாமே!
ஆபீ : ஆமா யாரு வேணும்?
கல் : சந்திரசேகரன், ஞானசேகரன், குணசேகரன்.
ஆபீ : அப்படி ஒருவரும் இல்லையே! அதோ அந்த ஆலமரத்தடிலே ஒரு கூட்டம் இருக்கு அங்கே போயி விசாரி.
கல் : அண்ணு நீங்களெல்லாம் பர்மாவிலே இருந்துதானே வர்றீங்க?
ஒரு : ஆமாம்மா அகதிகளாக வந்தோம், ஆண்டிகளாக மாறிவிட்டோம்!
கல் : இரங்கூனில் என் அண்ணன்மார்களைத் தெரியுமா?
மற் : ஊரும். அவுங்க பேரு என்ன?
கல் : சந்திரசேகரன்... ஞானசேகரன்... குணசேகரன்...
ஒரு : எங்ககூட்டமே இவ்வளவு பேருதான் இதிலே உன் அண்ணன்மார்கள் இருக்காங்களான்னு பாரு (கல்யாணி பார்க்கிறாள் இல்லை)