பொருட்பால் · நட்பியல் · வரைவின் மகளிர்

குறள் 917வரைவின் மகளிர்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்பேணிப் புணர்பவர் தோள்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உள்ளத்தில் அன்பு இல்லாமல் தன்னலத்துக்காக உடலுறவு கொள்ளும் பொதுமகளிர் தோளை, உறுதியற்ற மனம் படைத்தோர் மட்டும் நம்பிக் கிடப்பர்.

மூலம் · அச்சுப் பக்கம் 186 · ஸ்கேன் 219 · மூலமும் சான்றும்