பொருட்பால் · நட்பியல் · உட்பகை

குறள் 890உட்பகை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்பாம்போ டுடனுறைந் தற்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 180 · ஸ்கேன் 213 · மூலமும் சான்றும்