பொருட்பால் · நட்பியல் · பழைமை

குறள் 808பழைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்குநாளிழுக்கம் நட்டார் செயின்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நண்பர்கள் செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு நம்பிக்கையான நட்புரிமை கொண்டவரிடத்திலேயே அந்த நண்பர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த நாளெல்லாம் வீணான நாளாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 164 · ஸ்கேன் 197 · மூலமும் சான்றும்