பொருட்பால் · அரணியல் · அரண்

குறள் 749அரண்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்துவீறெய்தி மாண்ட தரண்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்ளேயிருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 152 · ஸ்கேன் 185 · மூலமும் சான்றும்