குறள் 747 — அரண்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்பற்றற் கரிய தரண்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
முற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ அல்லது வஞ்சனைக் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்.
மூலம் · அச்சுப் பக்கம் 152 · ஸ்கேன் 185 · மூலமும் சான்றும்