குறள் 716 — அவையறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறிவுத்திறனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும் உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 146 · ஸ்கேன் 179 · மூலமும் சான்றும்