இன்பத்துப்பால் · கற்பியல் · நிறையழிதல்

குறள் 1259நிறையழிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்கலத்தல் உறுவது கண்டு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துத்தான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்.

மூலம் · அச்சுப் பக்கம் 256 · ஸ்கேன் 289 · மூலமும் சான்றும்