இன்பத்துப்பால் · கற்பியல் · நிறையழிதல்

குறள் 1253நிறையழிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்தும்மல்போல் தோன்றி விடும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் கட்டுப்படாமல் தும்மல் நம்மையும் மீறி வெளிப்படுகிறதல்லவா; அதைப் போன்றதுதான் காதல் உணர்ச்சியும்; என்னதான் மறைத்தாலும் காட்டிக் கொடுத்துவிடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 255 · ஸ்கேன் 288 · மூலமும் சான்றும்