இன்பத்துப்பால் · கற்பியல் · கண் விதுப்பழிதல்

குறள் 1174கண் விதுப்பழிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றாஉய்வில்நோய் என்கண் நிறுத்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தப்பிப் பிழைக்க முடியாத, தீராத காதல் நோயை எனக்குத் தருவதற்குக் காரணமான என் கண்கள், தாமும் அழ முடியாமல் வற்றிப் போய்விட்டன.

மூலம் · அச்சுப் பக்கம் 239 · ஸ்கேன் 272 · மூலமும் சான்றும்