இன்பத்துப்பால் · கற்பியல் · கண் விதுப்பழிதல்

குறள் 1172கண் விதுப்பழிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்பைதல் உழப்ப தெவன்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

விளைவுகளை உணராமல் மயங்கி நோக்கிய மைவிழிகள், இன்று, காதலரைப் பிரிந்ததால் துன்பமுறுவது தம்மால்தான் என அறியாமல் தவிப்பது ஏன்?

மூலம் · அச்சுப் பக்கம் 239 · ஸ்கேன் 272 · மூலமும் சான்றும்