இன்பத்துப்பால் · களவியல் · குறிப்பறிதல்

குறள் 1093குறிப்பறிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்யாப்பினுள் அட்டிய நீர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது; அந்தச் செயல் அவள் என்மீது கொண்ட அன்புப் பயிருக்கு நீராக இருந்தது.

மூலம் · அச்சுப் பக்கம் 223 · ஸ்கேன் 256 · மூலமும் சான்றும்