குறள் 1093 — குறிப்பறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்யாப்பினுள் அட்டிய நீர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது; அந்தச் செயல் அவள் என்மீது கொண்ட அன்புப் பயிருக்கு நீராக இருந்தது.
மூலம் · அச்சுப் பக்கம் 223 · ஸ்கேன் 256 · மூலமும் சான்றும்