இன்பத்துப்பால் · களவியல் · குறிப்பறிதல்

குறள் 1091குறிப்பறிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்குநோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

காதலியின் மைத்தீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன; ஒரு பார்வை காதல் நோயைத் தரும் பார்வை; மற்றொரு பார்வை அந்த நோயுக்கு மருந்தளிக்கும் பார்வை.

மூலம் · அச்சுப் பக்கம் 223 · ஸ்கேன் 256 · மூலமும் சான்றும்